search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கோரிக்கை"

    • கோவில் வருமானத்தை பெற்று கொண்டு கோவிலைமுறையாக பராமரிப்பதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • பலமுறை பக்தர்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோவில் சிற்பங்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற தர்மராஜாகோவில் கடைத்தெருவில் அமைந்து ள்ளது.

    12 கிராம மக்கள், உள்ளுர், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இதனால் பல லட்சம் ரூபாய் இந்து அறநிலைய துறைக்கு காணிக்கையாக கிடைக்கிறது. கோவில் வருமானத்தை பெற்று கொண்டு கோவிலைமுறையாக பராமரிப்பதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இக்கோவில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது கோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் சிதிலமடைந்து உடைந்து விழுந்து வருகிறது.

    பலமுறை பக்தர்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோவில் சிற்பங்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனால்அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தர்மராஜா கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதியிலேயே நிறுத்தி விட்டதால் கழிவுநீர் கால்வாய் முடிவு பெறாமல் பெயரளவுக்கு இருந்து வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் மழைக்காலங்களில் மழை நீரும் கழிவு நீருடன் சேர்ந்து சாலையில் வழிந்து ஓடுகிறது.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்த்தம்பட்டி கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீர் வெளியேறுவதற்காக நார்த்தம்பட்டி புதூர் பகுதியில் இருந்து தம்மனம்பட்டி பிரிவு சாலை வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

    தொடர்ச்சியாக 300 மீட்டர் தூரத்தில் உள்ள ஏரிக்கோடி பகுதி வரை கழிவுநீர் கால்வாய் நீட்டிப்பு செய்யாமல் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டதால் கழிவுநீர் கால்வாய் முடிவு பெறாமல் பெயரளவுக்கு இருந்து வருகிறது.

    பொதுமக்கள் வெளியேற்றும் கழிவு நீர் வெளியேறுவதற்கு சாலை நெடுக்க 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுக்கில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் மழைக்காலங்களில் மழை நீரும் கழிவு நீருடன் சேர்ந்து சாலையில் வழிந்து ஓடுகிறது.

    இதனால் அப்பகுதியில் கொசு பெருகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
    • ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது.

    சென்னை:

    வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்வது பேசின் பாலம்.

    வடசென்னை பகுதி வாசிகள் மட்டுமின்றி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    வால்டாக்ஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் பெரியமேடு, வேப்பேரி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியாகவே வருகிறார்கள். பேசின் பாலம் அருகில் உள்ள நடைபாதை வழியாக சென்று அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் நடை பாதையை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    அவசரத்துக்கு சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

    இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுநீர் கழிப்பவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.

    இது தொடர்பாக பேசின் பால பகுதியை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, நடை பாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தடுப்பு வேலிகள் போன்று அமைத்தால் அது பலன் அளிக்கும்.

    அதே நேரத்தில் கழிவறை கட்டி கண்காணித்தாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்றனர். சிறுநீர் கழிப்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இது ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து மக்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தங்கள் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு தூக்கிக் கொண்டு இடுப்பளவு தண்ணீர் போகக்கூடிய ஆற்றைக் கடந்து தான் வரவேண்டும்
    • இடுப்பளவு தண்ணீர் வழியாக தான் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் செல்கின்ற அவலம் இன்றளவும் நீடித்து வருகிறது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கெளாப்பாறை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது வரை இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீர் உள்ள ஆற்றைக் கடந்து தான் சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கெளாப்பாறை கிராமத்தை சேர்ந்த செந்தில், வயது (34) என்பவர் புற்று நோய் காரணமாக இறந்த நிலையில் அவருடைய உடலை இடுப்பளவு தண்ணீர் போகக்கூடிய ஆற்றில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

    இந்த அவலங்களை போக்க தரைப்பாலம் அமைத்து தர வேண்டி பல முறை அரசு அதிகாரி களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவி ல்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

    தங்கள் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு தூக்கிக் கொண்டு இடுப்பளவு தண்ணீர் போகக்கூடிய ஆற்றைக் கடந்து தான் வரவேண்டும் என தெரிவித்த கிராமத்தினர் இல்லையென்றால் அருகில் இருக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கிராமத்தின் வழியாகத்தான் வரவேண்டும். அப்படி நாங்கள் எடுத்து வந்தால் அவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

    மேலும், இந்த இடுப்பளவு தண்ணீர் வழியாக தான் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் செல்கின்ற அவலம் இன்றளவும் நீடித்து வருகிறது.

    இனிவரும் காலங்களில் தலைப்பாலம் அமைத்து தராவிட்டால் கிராம மக்கள் ஒன்று திரண்டு அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் 40ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • திருமணம் போன்ற விசேஷ நாட்களில் வாகன எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதனை சரி செய்ய குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றது.ஆனால் இன்னும் குழியை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன அந்தப்பகுதி வளைவான பகுதி என்பதால் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குழாய் உடைப்பு பணிகளை விரைவாக செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அபிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப் படுகின்றனர்.

    அபிராமம் மற்றும் நத்தம், பாப்பனம், விரதக் குளம், அச்சங்குளம் டி.வல்லகுளம் காடனேரி உள்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்காக நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுதிக்கோ, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடிக்கோ செல்லும் அவலநிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமத்தை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பிரசவம், காய்ச்சல், இரவு நேரங்களில் பூச்சி, பாம்பு, போன்ற விஷ ஜந்துகள் கடிபட்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது டாக்டர்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நோயாளிகளை கமுதிக்கோ, பரமக்குடிக்கோ, மதுரைக்கோ கொண்டு செல்லும்போது உயிர் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அவசர விபத்து சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், பாம்பு கடி போன்ற விஷ ஜந்துகள் கடிக்கு தேவையான மருந்துகள் இங்கு இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இதனை தடுத்த நிறுத்து வதுடன் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நிரந்தரமாக 24 மணி நேரமும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

    • புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளது.
    • நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடக்க முடியாத அளவிலும், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கொசு தொல்லைகளும் மற்றும் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.

    எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள 1-வது முதல் 9-வது வீதிகள் வரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி, முத்து நகர் பகுதி பொதுமக்களும் இச்சாலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இச்சாலை நல்லூர் ஊராட்சி மற்றும் மாதம்பாளையம் ஊராட்சி சேர்ந்த சாலை என்பதால் ஊராட்சி தலைவர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய சேர்மன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையன சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
    • 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். 

    இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
    • பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்களில் யாராவது? இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களது உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது? இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா(வயது55) என்பவர் அகால மரணம் அடைந்தார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே, பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பருத்தி மேனி குப்பம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    • தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தாகும்.

    மணலி கந்தசாமி வீதி வழியாக செல்லும் சாலை ஈரோடு நாமக்கல் மாவட்டம் செல்வதற்கு பிரதான முக்கிய சாலையாகவும், ஈரோடு நாமக்கல் என 2 மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இருப்பதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இப்பகுதி வழியே ஈரோடு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் கல்லூரி வாகனங்கள் தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தார் சாலை அமைக்காததால் மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகள், மழை நீரால் நிரம்பி காணப்படுவதுடன், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் நிரம்பி இருப்பதை தெரியாமல் வாகனங்களை இயக்கி பலர் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

    மணலி கந்தசாமி சாலையை புதுப்பித்து தருமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து, தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திட்டக்குடி பகுதிகளில் அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டது.
    • அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டார பகுதிகளில் சிறுமுலை, பெருமுலை, திட்டக்குடி, தர்மகுடிகாடு, கோழியூர் ,தொள்ளார்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்று டிவி பார்த்து வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் சுமார் 24 மணி நேரம் அரசு கேபிள் நோ சிக்னல், இணைப்பு கிடைக்கவில்லை இதனால் கேபிள் சேவை முடங்கியதால் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை அறிய முடியாமலும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக தொடர்ந்து அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×